சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்….

இமயமலை பயணம் மேற்கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக தலங்களுக்கு செல்லும் முன் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று குருக்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்…

இமயமலை பயணம் மேற்கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக தலங்களுக்கு செல்லும் முன் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று குருக்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு ஓய்வு கிடைக்கும் போது இமயமலை செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அவர் இமயமலை செல்வது வழக்கம் . கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக அவர் கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லவில்லை.

அதே போல் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று வெளியானது. நேற்று முன்தினம் ரஜினிகாந்த தனது இமயமலை பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்தில் அவா் 7 நாள்கள் அங்கு தங்கியிருந்து பாபாஜி குகை, கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல உள்ளார் என கூறப்பட்டது.

இந்நிலையில், ஆன்மீக தலங்களுக்கு செல்லும் முன் ரஜினிகாந்த் அங்குள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று குருக்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதுடன் அவர்களின் ஆன்மீக உரைகளைக் கேட்டு அவரும் சிறப்புரை ஆற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய பிறகு ’தலைவர் 170’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த முடித்த இன்னொரு திரைப்படம் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.