ECR சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி, ஒன்றிய அரசின் பங்களிப்புடன் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது ஈசிஆர் சாலைப் பணி குறித்து எம்எல்ஏ ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ஈசிஆர் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி கைவிடப்பட்டதாக பத்திரிகைகளில் வெளியான செய்தி தவறு என குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ECR சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி, ஒன்றிய அரசின் பங்களிப்புடன் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவையில் தெரிவிக்கும் தகவல்தான் உண்மையானது என குறிப்பிட்டார். மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் புதிய மாவட்டம் என்பதால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் புறவழிச்சாலைகளில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என கூறினார்.
அண்மைச் செய்தி: லாரி, பேருந்து, கார் அடுத்தடுத்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழப்பு
நடப்பாண்டில் எங்கெல்லாம் சாலை அமைக்க முடியுமோ, அங்கெல்லாம் புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட அவர், நீடாமங்கலம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பாலம் கட்டும் பணியை மாநில அரசே மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.