முக்கியச் செய்திகள்செய்திகள்

கீழக்கரை ஜல்லிக்கட்டில் அசத்திய பூவந்தியை சேர்ந்த அபிசித்தர்! அலங்காநல்லூரில் தவறவிட்ட முதலிடத்தை தட்டிச்சென்றார்!

கீழக்கரை ஜல்லிக்கட்டில் முதல் இடத்தை பிடித்து பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் அசத்தியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட நிலையில், கீழக்கரையில் சாதித்து மஹிந்திரா தார் ஜீப் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் தட்டிச் சென்றார். 

மதுரை மாவட்டம் கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் 10 காளைகளை அடக்கிய அபிசித்தர் என்பவர் முதலிடம் பிடித்தார். அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரை புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தில் இன்று (ஜன. 24) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. கீழக்கரையில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று மாலை நிறைவடைந்த நிலையில், அபிசித்தர் என்ற இளைஞர் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவருக்கு ரூ.1 லட்சம் பணத்துடன், மஹிந்திரா தார் ஜீப்பை பரிசாக வழங்கப்பட்டது. வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி இந்தப் பரிசினை வழங்கினார். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட அபிசித்தர் இந்தப் போட்டியில் முதலிடம் பிடித்தார். கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் தலா 6 காளைகளை அடக்கிய தமிழரசன், பரத் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு!

Web Editor

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

G SaravanaKumar

மிக்ஜாம் புயல் பாதிப்பு | இடைக்கால நிவாரணம் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading