மயிலாடுதுறை நகராட்சியில் பதவியேற்ற கவுன்சிலர்கள் சொகுசு வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
மயிலாடுதுறையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற
வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி
அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 திமுக கவுன்சிலர்கள், ஏழு அதிமுக
கவுன்சிலர்கள், இரண்டு பாமக கவுன்சிலர்கள், தலா ஒரு காங்கிரஸ் மற்றும் மதிமுக
கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருபத்திநான்கு கவுன்சிலர்களை திமுக கையில் வைத்திருந்தாலும் நகர்மன்றத் தலைவர் பதவிக்குநகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ், அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் மைத்துனரும், முன்னாள் நகர மன்றத் தலைவருமான லிங்கராஜன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதனால் கவுன்சிலர்களை இருதரப்பும் மடக்கி சென்று சொகுசு விடுதிகளில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று பதவியேற்ற கையோடு நகர்மன்ற அலுவலக
வாசலில் போலீஸ் பாதுகாப்பு இருபுறமும் நிற்க, ஆண் கவுன்சிலர்கள், பெண்
கவுன்சிலர்கள் அவர்களது கணவருடன் இரண்டு ஏசி வாகனத்தில் ஏற்றி விடுதிக்கு
அழைத்துச் சென்றுள்ளனர். சில கவுன்சிலர்களின் கையை பிடித்து இழுக்காத குறையாக
திமுகவினர் வேனில் ஏற்ற முயற்சித்தனர். இருப்பினும் அவர்கள் மறுத்து வெளியேறி
சென்றனர். ஒரு சிலர் சொகுசு வாகனத்தில் ஏறி சுற்றுலா செல்வது போல் டாடா
காட்டிக் கொண்டு கையை அசைத்தபடி மகிழ்ச்சியாக சென்றனர். பதவியேற்பு விழா
முடிந்த கையோடு சுட சுட கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.