திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி உலக தரத்தில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி காஜாமலை சாலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனை தொடர்ந்து 2,764 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கி கடன் உதவிகளையும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும்,
8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளையும் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் எது நடந்தாலும் அது மிக பிரமாண்டமாக இருக்கும் அதுதான் திருச்சி. அதனை அமைச்சர் கே.என்.நேரு தற்போது நடத்திக் காட்டி உள்ளார். சட்டசபையில் அவசர சட்டத்திற்கு பதில், நிரந்தர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் விளக்கம் கேட்டார். 24 மணி நேரத்தில் விளக்கம் அளித்தும் இன்னும் ஒப்புதல் தர வில்லை. தமிழக முதலமைச்சர், சட்ட துறை அமைச்சர், மற்ற கட்சியினர் வலியுறுத்தியும் இன்னும் ஒப்புதல் அளிக்க வில்லை.
#LIVE: திருச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள், விருதுகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/RmzYhotz9j
— M.K.Stalin (@mkstalin) December 29, 2022
திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி உலக தரத்தில் அனைத்து வசதிகளுடன் கொண்டு வரப்படும். இதன் வாயிலாக விளையாட்டு துறையில் நமது மாணவர்கள் பல நாடுகளுக்கு சென்று வெற்றி பெற வேண்டும். விளையாட்டு துறையிலும் நமது மாணவர்கள் பெரிய அளவில் வளர இது உதவிகரமாக இருக்கும்.
இலவச பேருந்து பயணத்தின் காரணமாக பெண்களின் சமூக பொருளாதார தரம் உயர்ந்துள்ளது. பெண்கள் வெளியில் வந்து பல்வேறு சிறு தொழில்களை துவங்கியுள்ளனர். விளிம்பு நிலை மக்களுக்கான அரசாங்கமாக திமுக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.