சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தனியார் பள்ளி போக்குவரத்து பிரிவு மேலாளர் கார்த்தீபன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாந்தா மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் யு.கே.ஜி மாணவிக்கு நடைபெற்ற வன்கொடுமை வழக்கில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர் காமராஜ் மற்றும் பள்ளி தாளாளர் பிரபாவதி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கைது செய்யப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் என்ற முறையில் பிரபாவதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதுமட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் காமராஜிடம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆணையை உலகபட்டு அரசு பள்ளி ஆசிரியர் மணிவண்ணன் வழங்க காவல் நிலையத்திற்கு வந்த போது போலீசார் சுமார் அரைமணி நேரம் தலைமையாசிரியர் மணிவண்ணணிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், காமராஜ் மற்றும் பள்ளியில் பணியாற்றும் ஊழியர்களிடம் தனித்தனியாக சுமார் 14 மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் நான்கு வயது பள்ளி சிறுமையை வன்கொடுமை செய்ததாக பள்ளியின் போக்குவரத்து பிரிவு மேலாளர் கார்த்தீபன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர் காமராஜ் மற்றும் தனியார் பள்ளியின் போக்குவரத்து பிரிவு மேலாளர் கார்த்தீபன் ஆகிய இருவரையும் திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதி பார்த்தசாரதி முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருவதால் பள்ளியில் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவும் வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் இன்று ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.