முக்கிய விளையாட்டு செய்திகளின் தொகுப்பை வழங்குகிறது இந்தப் பகுதி.
புதிய தேசிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா:
சுவீடனில் நடைபெற்றுவரும் வண்டா டயமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும், இது நீரஜ் சோப்ராவின் புதிய தேசிய சாதனையாகும். இதுவரை நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டிகளில், 89.94 புள்ளிகள் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மலேசிய ஓபன் பேட்மிண்டன் 2022 சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து வெளியேறினார் பி.வி. சிந்து:
கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிப் போட்டியில், தைவான் நாட்டு வீராங்கனை யிங் தாய் இடம், இந்திய வீராங்கனை 2-1 எனப் போராடித் தோல்வியுற்றார். தோல்வியைத் தொடர்ந்து தொடரிலிருந்து வெளியேறினார் Pபி.வி. சிந்து.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு:
இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், வரும் ஜூலை 7-ஆம் தேதி டி20 போட்டிகளும், அதனை அடுத்து ஜூலை 12-ஆம் தேதி ஒருநாள் தொடர்களையும் விளையாடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி, நேற்றைய தினம் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம், இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இரு தொடர்களுக்கும் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்க பட்டுள்ளார்.
இந்திய டி20 அணி – முதல் போட்டி:
ரோஹித் ஷர்மா ( கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (wk), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர்,. யஸ்வேந்திர சஹால், அக்சர் படேல், ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
இந்திய டி20 அணி – இரண்டாம் மற்றும் மூன்றாம் போட்டி:
ரோஹித் ஷர்மா ( கேப்டன்), இஷான் கிஷன், விராத் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் (wk), ரிஷப் பண்ட் (wk), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யஸ்வேந்திர சஹால், அக்சர் படேல், ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
இந்திய ஒருநாள் அணி – 3 போட்டிகள் கொண்ட தொடர்:
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், இஷான் கிஷன், விராத் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (wk), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷார்துள் தாகூர், யஸ்வேந்திர சஹால், அக்சர் படேல், ஜாஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முஹம்மது ஷமி, முஹம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங்
2007-ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இந்தியா?:
துவங்கியது இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி. கடந்த வருடம் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. எனவே இந்தியா தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று இந்தியா இங்கிலாந்து இடையே கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்த நிலையில், இந்திய அணி பேட்டிங்கை துவங்கியது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 4 போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், இங்கிலாந்து 1 போட்டியிலும் வெற்றி பெற்று 2-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்த நிலையில், இந்த கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 2007 பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.
அண்மைச் செய்தி: ‘கோவில் திருவிழாவில் சோகம்; 5 பேரை மது பாட்டிலால் குத்திய வாலிபர்’
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை அபாரமாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி:
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக கேமரூன் கிரீன் தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி:
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியை இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய மகளிர் அணி.
இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனை படைத்த ரிஷப் பண்ட்:
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் விளாசி அசத்தினார். 89 பந்துகளில் 100 ரன்கள் அடித்ததன் மூலம், இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிவேக சதம் அடித்த எம் எஸ் தோனியின் சாதனையை முந்தினார் ரிஷப் பண்ட். Ms தோனி இதற்கு முன்பு 92 பந்துகளில் இந்த சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.