29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய தனியார் நூற்பாலை வாகனம்: பதற வைக்கும் காட்சிகள்!

பள்ளிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தனியார் நூற்பாலையின் வாகனத்தை உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமி, தனது பேத்தியுடன் மாதேஸ்வரன் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த தனியார் நூற்பாலை வாகனம் மோதியதில் மூதாட்டி லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உடனடியாக அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு முன்னதாக கோபமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் தனியார் நூற்பாலை வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் வேகத்தடை மற்றும் சிசிடிவி கேமரா அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading