அலகு குத்தி வந்த பெண்ணுக்கு சாம்பிராணி போட்ட இஸ்லாமியர்..! வைரலாகும் வீடியோ

ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் கோயிலின் 83 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு அலகு குத்தி வந்த பெண்ணுக்கு இஸ்லாமியர் சாம்பிராணி போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.  ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம்…

ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் கோயிலின் 83 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு அலகு குத்தி வந்த பெண்ணுக்கு இஸ்லாமியர் சாம்பிராணி போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. 

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே மிகவும் பழமை வாய்ந்த, ஸ்ரீவழிவிடு முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 83ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த மதம் 28-ஆம் தேதி கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல்நாள் நிகழ்ச்சியில் முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மேலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வழிவிடு முருகன், வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனை தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று பூக்குழி இறங்குதல், பால்குடம், வேல் காவடி, மயில் காவடி ஆகியவை எடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் ராமநாதபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து காப்பு கட்டியும், பால்குடம் எடுத்தும், வேல் காவடி, மயில் காவடி ஆகியவை எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண்ணுக்கு, இஸ்லாமியர் ஒருவர் மதங்களை கடந்து, எல்லோரும் ஒன்று தான், எல்லா கடவுள்களும் ஒன்றுதான் என்பது போல் சாம்பிராணி போட்ட நிகழ்வு அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. மேலும் அந்த இஸ்லாமியர் சாம்பிராணி போட்டு மந்திரங்களை சொல்ல சொல்ல, அலகு குத்திய பெண் பக்தியின் உச்சத்திற்கு சென்று சாமி வந்து ஆடவும் செய்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.