கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே பள்ளி மாணவர்களுக்கு
குரங்கு ஒன்று பேன் பார்த்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே ஏந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது வீட்டில் அவரது மகன் மற்றும் தங்கையின் மகள் ஆகியோர் , மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென அங்கு வந்த குரங்கு ஒன்று , விளையாடிக் கொண்டிருந்த
குழந்தைகளிடம் சகஜமாக பழகி அவர்களுக்கு பேன் பார்த்தது. இந்த தகவல் அறிந்த,
ஊர் மக்கள், பள்ளி மாணவர்கள் அனைவரும் இதனை காண்பதற்காக ஏழுமலையின்
வீட்டிற்கு வந்தனர். கூட்டமாக இருந்த போதிலும் , குரங்கு சிறிதும் அச்சமின்றி
மாணவர்களை அழைத்து அவர்களது தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தது.
இந்த காட்சியை , அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனது செல்போன் மூலம்
வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதனை, சமூக வலைதளங்களில்
பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ அப்பகுதியில் உள்ள சமூக
வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை, பார்த்த நெட்டிசன்கள்
பல்வேறு விதமாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
—கு.பாலமுருகன்







