அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக, ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரில் கைதாகி பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, முன்னாள் அதிபர் ட்ரம்ப்புடன், ரகசிய உறவு இருப்பதாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த டிரம்ப், இவ்விவகாரத்தை பேசாமல் இருக்க நடிகை ஸ்டார்மிக்கு ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தொகை ட்ரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில், சட்ட ரீதியிலான செலவு என குறிப்பிடப்பட்டதால் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டது. இது தொடர்பான வழக்கு நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் : அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது
தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட ட்ரம்ப், மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அமெரிக்க சட்ட விதிகளின் படி ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். பின்னர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த டொனால்ட் ட்ரம்ப்பின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த ஆண்டு தொடரும் என்று நீதிமன்றம் கூறியதை அடுத்து, ஜாமீனில் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீனுக்கு பின் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “இது போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடக்கும் என்று நான் நினைத்து பார்த்ததில்லை. நான் செய்த, செய்துகொண்டிருக்கும் ஒரே குற்றம், இந்த நாட்டை அழிக்க நினைப்பவர்களை எதிர்த்து போராடுவதுதான். அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் முன்னர் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. நம்முடைய நாடு நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த உலகம் ஏற்கெனவே நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.