நீட் தேர்வு முறைகேடு புகார்: குழு அமைத்து விசாரணை என மத்திய அரசு அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய உயர் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில்…

நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய உயர் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

நீட் மறுதேர்வு நடத்த வலியுறுத்தி சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை எழுதியுள்ளனர்.  அந்தக் கடிதத்தில், பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார், க ருணை மதிப்பெண் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு,  இதுவரை இல்லாத அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவைகளை சுட்டிக்காட்டி மறுதேர்வு நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.

தங்களின் எதிர்காலம் தொடர்புடைய விவகாரம் என்பதால் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமை ஆகியவையும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.  தேர்வு முடிவுக்கு முன்பே ஒஎம்.ஆர் ஷீட் மற்றும் வினாக்களுக்கான விடைகளையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.  தேர்வு முடிவு வெளியிடப்பட்ட போது ஒஎம்.ஆர் ஷீட்டுடன் ஒப்பிடுகையில்,  மாறுபட்ட மதிப்பெண்கள் போடப்பட்டு இருப்பதாக பல மாணவர்கள் புகார்களை முன்வைத்துள்ளனர்.

நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  அதே வேளையில்,  நீட் தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை, நேர்மையான முறையிலேயே நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்ததது.

இந்த நிலையில் மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி டெல்லியில் இன்று செய்தியாளரகளை சந்தித்ததார்.  அப்போது அவர் தெரிவித்ததாவது..

“ நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்.  கருணை மதிப்பெண் வழங்கியதால் தான் அதிக மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படும்” என சஞ்சய் மூர்த்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.