புதுச்சேரியில் நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் கடந்த ஆண்டை விட 4.8 சதவீதம் தேர்ச்சி அதிகம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கல்விப் பாடத்தைப் பின்பற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நடந்து
முடிந்த +2 தேர்வில் 96.13 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இது கடந்த ஆண்டைவிட
4.8 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்த வரை
91.96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் கடந்த மே மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 14,423 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில்
13,865 மாணவ-மாணவிகள் தேர்சி பெற்றுள்ளார்கள். மொத்தமுள்ள 154 பள்ளிகளில் 68
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மேலும் அதிகபட்சமாக வணிகவியல் பாடத்தில் 144 மாணவர்கள் 100 மதிப்பெண்கள்
பெற்றுள்ளார்கள். மொழிப் பாடத்தைப் பொறுத்தவரை ஹிந்தியில் ஒருவர் மட்டுமே 100 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில் தமிழ் பாடத்தில் யாரும் 100 மதிப்பெண்கள் எடுக்கவில்லை.
தேர்வு முடிவுகள் குறித்து முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “12 ஆம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் கடந்த தேர்வை விட 10 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு நீட் பயிற்சி அரசு பள்ளிகளில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும்
உயர்கல்வியில் சேரும் வகையில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும் என்று
தெரிவித்தார்.
-மணிகண்டன்