78-வது ராணுவ தினம் : “நம்முடைய வீரர்கள் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக திகழ்கிறார்கள்” – பிரதமர் மோடி!

நம்முடைய வீரர்கள் சவாலான சூழ்நிலைகளில் நிலையான மனவுறுதியுடன் செயல்பட்டு, நாட்டை பாதுகாக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

78-வது ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இன்று ராணுவ அணிவகுப்பு நடத்தப்படுகிறது. ஜெகத்புரா பகுதியில் உள்ள, பிரிட்டிஷாரால் ஏற்படுத்தப்பட்ட ராணுவ தளத்திற்கு வெளியே முதன்முறையாக இந்த ராணுவ அணிவகுப்பு நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“இந்திய ராணுவத்தின் துணிச்சல் மற்றும் உறுதியான அர்ப்பணிப்புக்கு, ராணுவ தினத்தில், நாம் தலை வணங்குவோம். நம்முடைய வீரர்கள் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக திகழ்கிறார்கள். சவாலான சூழ்நிலைகளில் நிலையான மனவுறுதியுடன் செயல்பட்டு, நாட்டை பாதுகாக்கிறார்கள்.

அவர்களின் கடமையுணர்வு, நாடு முழுவதும் மக்களிடையே நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வை தூண்டுகிறது என அவர் தெரிவித்து உள்ளார். ராணுவ பணியின்போது, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை ஆழ்ந்த மதிப்புடன் நாம் நினைவுகூருவோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.