கன்னியாகுமரி மாவட்டத்தில் நண்பனின் நண்பனையே கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்த தங்கமுத்து- செல்வி தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர், இதில் 2-வது மகன் ரெஜின் (32). திருமணமாகவில்லை, கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 1-ந் தேதி ரெஜின் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான ராஜேஷ் வீட்டில் அனீஸ் உள்படமூன்று பேர் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ரெஜின் அவரது நண்பர் ராஜேஷ் ஆகிய இருவர் சேர்ந்து அனீசை தாக்கியதாகவும் இதில் படுகாயம் அடைந்த அனீசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அனீஸ் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் ரெஜின் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் ரெஜின், ராஜேஷ் வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கியது. இதில் பாடுகாயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் ரெஜின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரெஜின், ராஜேஷ் ஆகியோரை தாக்கியது அனிஸ் நண்பர்களான கோழிப்போர்விளை சேர்ந்த வினித் (24) கூட்டமாவு பகுதியை சேர்ந்த பரத் லியோன் (24), குழிக்கோட்டை சேர்ந்த அருண் (23), ஜெபின் (24), ஜிஜிஸ் (24) மற்றும் கோழிப்போர்விளையை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 6 பேரை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் நண்பன் அனீசை தாக்கியதற்காக ரெஜின், ராஜேஷை பலிவாங்கும் நோக்கில் கொலை செய்ததாக 6 பேரும் வாக்குமூலம் அளித்தனர்.
—அகதீஷ்.வெ