தமிழ்நாட்டில் வரைவு வாக்காளா் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ இன்று வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடி பேர், பெண்கள் 3.10 கோடி பேர், மூன்றாம் பாலினத்தவர் 18,016 பேர் உள்ளனர்.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.52 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடக்கும் இந்தச் சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிசம்பர் 9-ம் தேதி கடைசி நாளாகும். இந்தப் படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள அனைவரும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவாா்கள். இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும்
இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
இதே போல், அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.








