ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாகிஸ்தானை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தொடர் பயங்கரவாதம் நிகழும் இடமாக ஜம்மு காஷ்மிர் இருக்கிறது. அதனால் அங்கு போலீசார்களும், ராணுவ வீரர்களும் ரோந்து பணிகளிலும், எல்லையை காக்கும் பணிகளிலும் ஒய்வில்லாமல் இருந்து வருகின்றனர். அவ்வகையில், முக்கிய பயங்கரவாத அமைப்பாக திகழும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 5 முக்கிய பயங்கரவாதிகளை ஜம்மு காஷ்மீர் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
நேற்று புல்வாமா மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுப்பட்டிருந்த போது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து அவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அந்த அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
05 #terrorists of #Pakistan sponsored proscribed #terror outfits LeT & JeM killed in dual #encounters in last 12 hours. JeM commander terrorist Zahid Wani & a Pakistani terrorist among the killed. Big #success for us: IGP Kashmir@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) January 30, 2022
மேலும், புத்காம் மாவட்டத்தில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டிருந்த போது சிக்கிய மற்றொரு பயங்கரவாதியையும் அவர்கள் சுட்டுக் கொன்றனர். இதேபோல் கடந்த மாதம் நடந்த ஏராளமான என்கவுண்டர்களில் மொத்தம் 22 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.







