சென்னை காசிமேட்டில் மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ ட்ரோன்!

சென்னை காசிமேட்டில் மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ எடையிலான ட்ரோனை மீனவர்கள் காசிமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வடசென்னை காசிமேடு கடற்கரையில் பைபர் படகில் 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நண்டு பிடிக்கப்பதற்கான…

சென்னை காசிமேட்டில் மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ எடையிலான ட்ரோனை மீனவர்கள் காசிமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வடசென்னை காசிமேடு கடற்கரையில் பைபர் படகில் 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நண்டு பிடிக்கப்பதற்கான பிரத்தியேக வலையை பயன்படுத்தி போது, வலையில் சிலந்தி வடிவம் கொண்ட ட்ரோன் ஒன்று கிடைத்ததையடுத்து மீனவர்கள் காசிமேடு துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதனைப் பெற்ற காசிமேடு போலீசார், இது போன்ற ட்ரோன்களைக் கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ரோந்து பணிக்காக பயன்படுத்தி இருக்கலாம் என்றும் அவ்வாறு பயன்படுத்தப்படும் போது ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விழுந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
இது போன்ற ட்ரோன்கள் சினிமாவிற்கு பயன்படுத்தபடுவதில்லை மேலும்,  பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாய நிலங்களில் பூச்சுக்கொல்லி தெளிக்க பயன்படுத்தக் கூடியது என்றும் தெரிவித்தனர். இது சுமார் 5 கிலோ அளவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.