31.7 C
Chennai
April 28, 2024
தமிழகம் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 பேருக்கு நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

வழக்கறிஞர்களாக இருந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி 2021ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி எஸ். ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோருக்கும், அக்டோபர் 28ஆம் தேதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தும் கூடுதல் நீதிபதிகளாக அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற பரிந்துரையை ஏற்று, கூடுதல் நீதிபதிளாக பதவி வகித்து வரும் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி 5 கூடுதல் நீதிபதிகளுக்கும் நிரந்தர நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading