வைகை அணை; வினாடிக்கு 3569 கன அடி நீர் திறப்பு

வைகை அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு, வினாடிக்கு 3 ஆயிரத்து 569 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், 69…

வைகை அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு, வினாடிக்கு 3 ஆயிரத்து 569 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், 69 அடியை எட்டியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

ஏழு மதகுகள் வழியாக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், உபரி நீரின் அளவு, 3 ஆயிரத்து 569 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், வைகை ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.