தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 36 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று, சமீபகாலமாக குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 121 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 33 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 19 லட்சத்து 78 ஆயிரத்து 621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 3 லட்சத்து 13 ஆயிரத்து 048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 ஆயிரத்து 063 பேர் குணமடைந்து கடந்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 16 லட்சத்து 43 ஆயிரத்து 284 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று காரணமாக, ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை, 22 ஆயிரத்து 889 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 2779 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் சென்னையில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். 4719 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். செங்கல்பட்டில் 1392 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 751 பேருக்கும் திருவள்ளூரில் 1221 பேருக்கும் திருச்சியில் 1617 பேருக்கும் கோவையில் 4734 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.







