முக்கியச் செய்திகள்இந்தியாபக்தி

சபரிமலையில் 39 நாட்களில் 31.43 லட்சம் பேர் தரிசனம்: ரூ.204.30 கோடி வருவாய்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்கான 39 நாட்களில் 31.43 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும், கோயில் வருவாயாக ரூ.204.30 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் இன்று (டிச.26) காலை சபரிமலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“சபரிமலைக்கு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 18 கோடி ரூபாய் வருமானம் குறைந்துள்ளது. மண்டல சீசன் துவங்கி 39 நாட்களுக்கு பிறகு மொத்த வருவாயாக ரூ.204 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.222.98 கோடி வருவாய் கிடைத்தது. ஏலம் மற்றும் சில்லறையாக பெறப்பட்ட நாணயங்களையும் எண்ணும்போது இந்த எண்ணிக்கை மாறும்.

நன்கொடையாக ரூ.63.89 கோடி கிடைத்துள்ளது. அரவண பிரசாதம் விற்பனை மூலம் ரூ.96.32 கோடி கிடைத்துள்ளது. அப்பம் விற்பனை மூலம் ரூ.12 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. மண்டல காலம் தொடங்கி நேற்று வரை 31,43,163 பேர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். தேவசம் போர்டு அன்னதான மண்டபம் மூலம் நேற்று வரை 7,25,049 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது.

வரம்புகள் இருந்தபோதிலும், பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் சபரிமலை பக்தர்களுக்கு தேவசம் போர்டு சிறந்த வசதிகளை செய்து தந்தது. மண்டல பூஜை முடிந்து சபரிமலை நடை நாளை (டிச. 27) இரவு 11 மணிக்கு மூடப்படும். மகரவிளக்கு விழாவையொட்டி டிசம்பர் 30-ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 15-ம் தேதி மகரவிளக்கு விழா நடைபெறுகிறது. ஜனவரி 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஜனவரி 21-ம் தேதி காலை கோயில் நடை மூடப்படும்”

இவ்வாறு பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

“உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர் தான்” – முத்தையா முரளிதரன் கருத்து!

Web Editor

விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு – சென்னை காவல்துறை அதிரடி!

Web Editor

தமிழ்நாட்டில் புதிதாக 1,804 பேருக்கு கொரோனா

Halley Karthik

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading