ஆபாச சாட்டிங் மற்றும் வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள 30 வாட்ஸ் அப் குழுக்களை பாதிரியார் பெனெடிக் ஆண்டோ தொடங்கியிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆண்டோ. பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தின் பிலாங்காலை பேராலயத்தின் பாதிரியாராக பணியாற்றி வந்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு தேவாலயங்களில் பணியாற்றியுள்ளார். இளம்பெண்களுடன் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக சாட்டிங், வீடியோ காலில் நிர்வாண காட்சிகள் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோவிடம் போலீசார் 10 மணி நேரம் நடத்திய விசாரணைக்கு பின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார். பெனடிக்ட் ஆண்டோ பிளஸ் 2 படித்துவிட்டு இறையியல் கல்வியை முடித்துள்ளார்.
தொலைதூரக்கல்வி மூலம் எம்.ஏ., எம்.பி.ஏ படித்துள்ள இவருக்கு மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளை பேசத்தெரியும். பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ தன்னிடம் நண்பராக பழகிய பெண்ணை காதலித்து திருமணம் செய்ய விரும்பினார். பாதிரியாராக இருப்பதால் இவரது திருமணத்திற்கு குடும்பத்தார் சம்மதிக்கவில்லை. காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போனதால் நண்பராக பழகி வந்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாதிரியார் பெனடிக்ட் திருமணம் செய்துகொள்ள விரும்பிய பெண் தற்போது சென்னையில் வேலை பார்த்து வருவதாகவும், இருவரும் அடிக்கடி வீடியோ காலில் நிர்வாணமாக பேசுவது வழக்கம் எனவும் கூறப்படுகிறது. இருவரும் வீடியோ காலில் பேசுவதை மற்றொரு செல்போன் மூலம் பதிவுசெய்ததோடு, லேப்டாப்பிலும் பாதிரியார் பெனடிக்ட் பதிவு செய்து வைத்ததாக தெரிகிறது. இதேபோல நெய்யாற்றங்கரையைச் சேர்ந்த இளம்பெண்ணுடம் நெருக்கமாக பழகி நிர்வாண வீடியோக்கள் எடுத்து பதிவு செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
பாதிரியார் பெணடிக் ஆன்டோ தலைமறைவாக இருந்தபோது, கன்னியாகுமரி மாவட்டத்தையடுத்த கேரள எல்லைக்குட்பட்ட பாறசாலையில் மெட்ரிக் பள்ளி ஆசிரியை, மற்றும் சட்டக் கல்லூரி மாணவி மற்றும் பெண் டாக்டருடன் ஒரே அறையில் தங்கி வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
பாதிரியார் பெனடிக்ட் தன்னுடன் பணியாற்றிய 30 பாதிரியார்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கினார். இந்த குரூப்பில் தான் எடுத்த ஆபாச வீடியோக்கள் மற்றும் இளம் பெண்களுடன் பேசிய சாட்டிங்குகள், ஆபாச புகைப்படங்களை பகிர்ந்து வந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோவிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார் 13 சிம்கார்டுகள், மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இந்த 13 சிம் கார்டுகளில் ஆறு சிம் கார்டுகள் கர்நாடக மாநிலத்தில் வாங்கப்பட்டவை என தெரிந்துள்ளது. இவற்றை யாரிடம் இருந்து வாங்கினார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோவிடம் தொடர்பில் இருந்தவர்களையும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.







