சிறுபான்மையினர்களுக்கான 3.5 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை எழும்பூர் தனியார் அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கொளரவ தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், “திருக்குர்ஆன்-ல் என்னென்ன சொல்லி இருக்கிறதோ, அதை பாமக கடைபிடித்து வருகிறது. மது ஒழிப்பு, சூது ஒழிப்பு, சமூக நீதி போன்றவற்றுக்காக போராடி வருகிறது பாமக.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவையில் குண்டுவெடிப்புக்கு பிறகு சோதனைகள் குறித்து முஸ்லிம்கள் வருத்தப்பட்டபோது நாங்கள் சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று போராடினோம். தமிழ்நாடு அரசு இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு தரவேண்டும், இல்லையன்றால் நாங்கள் வடதமிழ்நாடு முழுவதும் புரட்சியை ஏற்படுத்துவோம் என்று கூறிய பிறகுதான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளித்தார்.
சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மதுதான். அதனை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் ஒன்றை எதிர்த்தால் கடுமையாக எதிர்ப்போம். ஆதரித்தால் கடுமையாக ஆதரிப்போம். வேறு ஒரு மதம், சாதி, மொழி பற்றியோ தவறாக பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது. இனியும் அவ்வாறே இருக்கும். நமது நோக்கம் வளர்ச்சி தான்.
இதையும் படியுங்கள் : சீட் தர மறுக்கும் பாஜக…. எதிரணிக்கு தாவும் மூத்த தலைவர்கள்… கர்நாடகவில் ஓங்கும் காங்கிரஸ் கை!
சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டம் மக்களை கொன்றது. அரசு தடை செய்துள்ளது. ஆனால் அதனை தடை செய்ய வைத்தது பாமக தான். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து சந்தித்து வலியுறுத்தினோம். கடலூரில் நிலக்கரி சுரங்க பிரச்னை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்னை. வருங்காலங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக இருக்கும். அதற்கான தடுப்பு வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.
இஸ்லாமிய சமுதாயத்திற்குகோ வேறு எந்த சிறுபான்மை சமுதாயத்திற்கு எந்த ஒரு பிரச்னை வந்தாலும் பாமக போராடும். தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வரவேண்டும். எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கும். எல்லாம் நன்மைக்கே. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். தமிழ்நாட்டில் அமைதி இருந்தால் அனைத்தும் கிடைக்கும். தற்பொழுது தமிழை காக்க வேண்டிய சூழல் உண்டாகி உள்ளது” என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழகத்தில் வாட்ச் பிரச்னை தற்பொழுது அதிகமாக பேசப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகமான பிரச்னை இருக்கின்றது. ஆனால் தற்பொழுது இந்த பிரச்னை கேவலமான ஒரு பிரச்னை. நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கும் நேரத்தில், இந்த பிரச்னை எழுந்திருக்கவே கூடாது. திமுக ஊழல் செய்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
நிலக்கரி சுரங்கம் அமைக்க மாட்டோம் என முதலமைச்சர் சட்டமன்றத்தில் உறுதி கொடுக்க வேண்டும். டெல்டா நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தடை விதிப்பது குறித்து முதலமைச்சர் ஏன் தாமதம் செய்கிறார். ஆறு டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் உறுதி கூறினால் மட்டுமே நாங்கள் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதை நிறுத்துவோம்.
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மாட்டோம் எனக் கூறுகின்றீர்கள். ஆனால் கடலூர் மாவட்டத்தில் அமைக்க எந்த ஒரு பிரச்னையும் இல்லையா? அங்கு வேளாண் நிலங்கள் விவசாயிகள் இல்லையா? டெல்டா மாவட்டங்களுக்கு ஒரு நீதி? கடலூர் மாவட்டத்திற்கு ஒரு நீதியா? இன்னும் 10 ஆண்டு காலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்படும். அப்போது நிலங்கள் தேவைப்படும். பொதுநிலங்களை எல்லாம் நிலக்கரி சுரங்கத்திற்கு தாரை வார்த்துவிட்டால் அப்போது சாப்பாட்டிற்கு திண்டாட தான் வேண்டும். அப்படி ஒரு சூழல் ஏற்படாமல் முதலமைச்சர் உடனடியாக நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான தடையை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு அதிக அளவில் போராடினோம். அதற்காக அதிக உயிர்கள் பறிபோனது. எம்பிசி இடஒதுக்கீடு வாங்கியதே வன்னியர்களுக்காக தான். ஆனால் வன்னியர்களுக்கு கூட ஒதுக்கீடு கிடைப்பதில்லை. அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று எம்பிசி தரவரிசைப் பட்டியலை எடுப்பதற்கு ஒரு வார காலம் கூட ஆகாது.
சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும். 1980 முதல் இன்று வரை தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு காரணம் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டியற்காக மட்டுமே. இதனைக் கொண்டு வர திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்க்கிறது. சிறுபான்மையினர்களுக்காக 3.5 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்” என்று தெரிவித்தார்.