2 வது டி 20 : டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு…..!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் டி 20 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 21ம் தேதி இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2வது டி 20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனை நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து வருகிறது.

அணி விவரம் 

இந்தியா : அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், குல்தீப் யாதவ்,  ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி.

நியூசிலாந்து :  டிம் சீஃபர்ட் டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), சாகரி ஃபோல்க்ஸ் , மாட் ஹென்றி , இஷ் சோதி மற்றும் ஜேக்கப் டல்லி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.