குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த 22 மீனவர்கள் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
குஜராத் கடல்பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய 79 படகுகளில் வந்த பாகிஸ்தானை சேர்ந்த 22 மீனவர்கள் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம் புட்ச் கடல்பகுதியில் கடலேரா காவல்படையினர் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது 79 மீன்பிடி படகுகள் இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைவதை கண்டு அப்படகுகளை சுற்றி வளைத்தனர்.
படகுகளை சோதனை செய்ததில் அதில் 22 பேர் இருந்தனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் வந்த படகுகளை கடலோர காவல் படையினர் சோதனையிட்ட போது அதில் ஹெராயின் போதை பொருள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ரூ.250 கோடி மதிப்புள்ள 50 ஹெராயின் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.2.49 கோடி மதிப்புள்ள 61 புகையிலை பாக்கெட்டுகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
அப்போது இந்திய கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்த 22 பேர்களில் வங்கதேசத்தை சேர்ந்த 2 பேரும், கனடாவை சேர்ந்த 2 பேரையும் கைது கடலோர காவல் படையினர் கைது செய்து எல்லை பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைந்தனர்.
குஜராத் கடற்பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தானை சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி நுழைவதும், அவர்களிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்வதும் சமீபகாலமாக அதிகரிதுள்ளது. மத்திய அரசு தற்போது போதைபொருட்களை ஒழிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே நாட்டின் எல்லை பகுதிகள், மாநில எல்லைகள், கடற்பகுதிகளில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.







