கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி- ஆர்வத்துடன் கண்டுகழித்த சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானலில் 22வது நாய்கள் கண்காட்சி கால்நடைத்துறை சார்பில் நடைபெற்றது.  இதனைச் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர் . மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் 60 ஆவது மலர்…

கொடைக்கானலில் 22வது நாய்கள் கண்காட்சி கால்நடைத்துறை சார்பில் நடைபெற்றது.  இதனைச் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர் .
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் 60 ஆவது மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவங்கி நடைபெற்று வருகிறது. கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு கோடை விழாவின் முக்கிய பங்காக 22 வது நாய்கள் கண்காட்சி கால்நடைத்துறை சார்பில் நடைபெற்றது.
வெளிநாட்டு வகைகளைச் சேர்ந்த நாய்கள், குறிப்பாக பீட்புல், ஸ்பானிஷ் மௌடைன்,  சைபீரியன் ஹஸ்கி, ஜெர்மன் ஷெப்பர்ட், சீட் சூ உள்ளிட்ட 17 வகையான நாய்கள் பங்கேற்றன. நான்கு பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் நாய்களின் அழகு, நாய்களின் ஒழுக்கம், கீழ் படிதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளை வைத்து நாய்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கால்நடைத்துறை சார்பாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பல்வேறு இடங்களில் இருந்து குவிந்த நாய்களைக் காண்பதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் என ஏராளமானோர் பிரையண்ட் பூங்காவில் குவிந்து, நாய்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
—-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.