தங்கத்திற்கு 15 சதவீதம் சுங்க வரியா? செல்வபெருந்தகை கண்டனம்!

தங்கம் மற்றும் வெள்ளிக்கு 15சதவீதம் சுங்கவரி (Customs Duty) விதித்திருப்பது, பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் சுமையாக்கும் செயல் என்று செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தங்கம் என்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வும், குடும்பங்களின் பாதுகாப்பான சேமிப்பும் ஆகும். ஆனால், ‘தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறிய சில நாட்களிலேயே தங்கம் மற்றும் வெள்ளிக்கு 15சதவீதம் சுங்கவரி (Customs Duty) விதித்திருப்பது, பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் சுமையாக்கும் செயல்.

ஒருபுறம் விலைவாசி உயர்வு. மற்றொருபுறம் வரி உயர்வு. இறுதியில் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தான்.

மக்களின் சேமிப்பையும், பெண்களின் எதிர்கால நம்பிக்கையையும் கூட வரிவிதிப்பின் மூலம் சுரண்டும் மத்திய பாஜக அரசின் இந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

பொருளாதார சுமையால் ஏற்கனவே துன்புறும் மக்களின் நிலையை புரிந்து கொண்டு, இந்த சுங்கவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.