முக்கியச் செய்திகள் இந்தியா

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு!

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடரந்து அதிகரித்து வருகிது. கடந்த ஆறு மாதத்திற்கு பின்னர் தற்போது ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு மீண்டும் ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் மே 4ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருந்ததைத் தொடரந்து, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுவை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து, இன்று பிரதமர் மோடி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உட்டபட பலருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பல மாநிலங்களில் தற்போது கொரோனாவின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில், மே 4ம் தேதி தொடங்க இருந்த சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்படும் நிலையில் 15 நாட்கள் முன்பாக மாணவர்களுக்கு அறிக்கை அனுப்பப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இதுவரை நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் திருப்தியளிக்கவிலை என்றால் அவர்களுக்கு பின்னர் தனியாக தேர்வு நடத்தப்படும் என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

என்னாச்சு? மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்!

Halley Karthik

ரூ.500க்கு அரை மணி நேரத்தில் கொரோனா நெகடிவ் சான்று; வாலிபர் கைது

Halley Karthik

வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்; ஆளுநர் உரை!

G SaravanaKumar