கோவையில் 105 வயது முதியவர் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்!

கோவையில் 105 வயது முதியவர் ஒருவர், நடந்து சென்று வாக்களித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் மாரப்பன். 105 வயதாகும் இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும்…

கோவையில் 105 வயது முதியவர் ஒருவர், நடந்து சென்று வாக்களித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் மாரப்பன். 105 வயதாகும் இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கருப்பராயன் பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், தள்ளாத வயதிலும் தனது வீட்டிலிருந்து பல அடி தூரம் நடந்து சென்று, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு, மாரப்பன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

மேலும் அவர், காந்தி, காமராஜர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளையும், தான் பார்த்துள்ளதாக கூறும் மாரப்பன், மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.