கோடை வெப்பம் நீங்கி மழை வர குகநாதீஸ்வரர் ஆலயத்தில் 1008 இளநீர் அபிஷேகம்

கன்னியாகுமரி, குகநாதீஸ்வரர் ஆலயத்தில் கோடை வெப்பம் நீங்கி மழை வர 1008 இளநீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. கன்னியாகுமரி , ரயில் நிலையம் அருகே தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டுகள்…

கன்னியாகுமரி, குகநாதீஸ்வரர் ஆலயத்தில் கோடை வெப்பம் நீங்கி
மழை வர 1008 இளநீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

கன்னியாகுமரி , ரயில் நிலையம் அருகே தமிழகத்தில் பிரசித்தி பெற்ற
சிவாலயங்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குகநாதீஸ்வரர்
ஆலயம் உள்ளது. இங்கு மூலவர் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இக்கோயிலில் இன்று கோடை வெப்பம் நீங்கி மழை பெய்யவும் , அதன் மூலம்
விவசாயம் பெருகி மக்கள் செழிப்புடன் வாழ வேண்டி, 1008 இளநீர் கொண்டு
அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் கொண்டு வந்த இளநீர் மூலம் மூலவருக்கு
சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து இறைவன்
அருள் பெற்றனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.