உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓசூரில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் சத்யா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், வருவாய் துறை சார்பில் ஓசூர் கோகுல் நகர் பகுதியில் அரசுக்கு
சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் சார் ஆட்சியர் சரண்யா, மாநகராட்சி மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, டிஎஸ்பி பாபுபிரசாத், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர் இந்த மரம் நடும் விழாவில் புங்கன், பூவரசன், அத்தி, பலா, அரசன், வேம்பு, உட்பட 20க்கும் மேற்பட்ட பல வகையான மரக்கன்றுகள் தொடர்ந்து 10 ஏக்கர் முழுவதும் நடப்பட்டது.
இதில் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்று மரங்களை நடவு செய்தனர். பின்னர் உலக
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வருவாய் துறை சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை உபயோகிப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமான பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து ஈஷா மையம் சார்பில் ஒரு கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு திட்டமானது துவங்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர். தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண் வளம் காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து மரக்கன்றுகளை நடவு செய்து பசுமையை ஏற்படுத்த பல்வேறு சமூக ஆர்வலர்கள் அறிவுரை வழங்கினர்.
-ம. ஶ்ரீ மரகதம்