பொன்னியின் செல்வன் படத்திற்காக, 10 படங்கள் நடிப்பதற்கு ஏற்படும் கஷ்டத்தை அனுபவித்தோம் என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனிடையே பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : பொன்னியின் செல்வனில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி! – பூங்குழலி
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில், நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா ஆகிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் ஜெயம் ரவி, “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பொன்னியின் செல்வனை, எந்த அளவுக்கு நாங்கள் கஷ்டப்பட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தோமோ அது போல மீடியாவும் பொறுப்புடன் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். நிறைய கஷ்டப்பட்டு உள்ளோம். சாதாரண கஷ்டம் இல்லை. 10 படத்துக்கான கஷ்டம் அது. நீங்கள் டீச்சர் மாதிரி சரியான விமர்சனம் கொடுக்கிறீர்கள். படம் நன்றாக வந்துள்ளது. நிச்சயமாக படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என நினைக்கிறேன். இதை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.