10 நாட்களில் 1 கோடி தேசிய கொடி விற்பனை- மத்திய அரசு

கடந்த 10 நாட்களில் தபால் துறை மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசிய கொடிகளை விற்பனை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  நாட்டின் 75-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ம் தேதியான வரும்…

கடந்த 10 நாட்களில் தபால் துறை மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசிய கொடிகளை விற்பனை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ம் தேதியான வரும் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு நாட்டின் 75வது சுதந்திரம் தினம் என்பதால் ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் மத்திய அரசு சுதந்திர தின கொண்டாட்டத்தை மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி நாட்டின் முக்கிய நகரங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த கட்டுரை போட்டிகள், கவிதை போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். மேலும், 75-வது சுதந்திர தின விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் அனைத்து பொதுமக்களும் வரும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பைத் தொடர்ந்து தேசியக் கொடிகளைப் பொதுமக்களிடம் சென்று சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்தியத் தபால் துறை சார்பிலும் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் இந்தியத் தபால் துறை மூலம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தபால் துறை அதன் 1.5 லட்சம் அலுவலகங்களின் நெட்வோர்க் மூலம் ஒவ்வொரு குடிமகனிடம் தேசியக் கொடிகளைக் கொண்டு சேர்கிறது. கடந்த 10 நாட்களுக்குள், ஆன்லைன் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இந்தியத் தபால் துறை 1 கோடிக்கும் அதிகமான தேசிய விற்பனையைச் செய்துள்ளது. இந்த கொடிகள் ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மூலம் இதுவரை 1.75 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இருக்கும் பொதுமக்களுக்குத் தேசியக் கொடிகளைக் கொண்டு செல்வதே எங்கள் இலக்கு. இந்த பணியில் 4.2 லட்சம் தபால் ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.