31.3 C
Chennai
April 24, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 – தமிழக அரசு அரசாணை வெளியீடு

நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் புதிதாக பதிவு செய்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா காலத்தில், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகையாக 2 முறை, தலா ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்கியது. இந்த நிவாரணத்தொகையை நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில், புதிதாக பதிவு செய்தவர்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் என உத்தரவிடக்கோரி, நாட்டுப்புறக்கலைஞர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், புதிதாக பதிவு செய்த கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து, நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் புதிதாக பதிவு செய்த தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்ப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 ஆயிரத்து 810 கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என்றும், இதற்காக 1 கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading