தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டுவதற்காக, பஞ்சாபை சேர்ந்த படைப்பாளிகளில் சிலர் சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்து விட்டனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், சாகித்ய அகாடமி விருதை வென்ற டாக்டர் மோகன்ஜித், டாக்டர் ஜஸ்விந்தர் சிங், ஸ்வராஜ்பிர் உள்ளிட்டோர் தங்களது சாகித்ய அகாடமி விருதை திரும்பி கொடுத்து விட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், கடும் குளிரில் அவர்களை அரசு தவிக்க விட்டதை பஞ்சாபை சேர்ந்த எழுத்தாளர்கள் எதிர்த்தார்கள் என்பதை நினைவுகூரும் வகையில் இது இருக்கும் என பஞ்சாபி எழுத்தாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.