ஓமலூர் அருகே சிறுமியை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை ஓராண்டுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை தேடி வந்தனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை மட்டும் ஊரில் கொண்டு வந்து விட்டு பிரகாஷ் தப்பியோடியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை ஓராண்டாக தேடி வந்தனர். இந்நிலையில், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







