கூகுள் மேப் தவறாக வழி காட்டியதால் 30 அடி அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள போர்டு கொச்சி பகுதியை சேர்ந்த 8
நண்பர்கள் நீர்விழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்த பின்னர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதியில் வனத்தினுள் உள்ள கிழார் குன்று நீர்வீழ்ச்சிக்கு செல்வது என முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மலையிஞ்சி பகுதி வரை
வாகனத்தில் அனைவரும் சென்றனர். இதன் பின்னர் வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும் என்பதால் வாகனத்தில் இருந்து இறங்கி அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் நீர்வீழ்ச்சியை சென்று அடையலாம் என எண்ணிய அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்ற அவர்கள் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை என கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்ற நிலையில் தான் அவர்களுக்கு தெரிந்தது நீர்வீழ்ச்சி எதிர் புறம் உள்ளது என்றும் தாங்கள் கூகுள் மேப்பை நம்பி வேறு ஒரு பகுதியில் இருப்பதையும் உணர்ந்தனர்.
அப்போது தாங்கள் இருக்கும் பகுதி யானைகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் அருகில் யானையின் பிளிறல் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் அதிர்ந்து போனார்கள்.
அப்போது ஜிஜு ஜேம்ஸ் என்பவர் நின்றிருந்த பாறையில் எதிர்பாராத விதமாக 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் அவரது கை மற்றும் காலில் பலத்த காயமடைந்த நிலையில் என்ன செய்வது என தெரியாமல் தவித்த அவரின் நண்பர்கள் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
இதனை அடுத்து கரிமண்ணூர் பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த
தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் பாறையில் தவறி விழுந்த ஜீஜூ ஜேம்ஸை நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் மீட்டு அவரை முண்டக்கயத்தில் உள்ள
தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.







