பிரிட்டன் இளவரசரும் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த பிப்ரவரி 17ம் தேதி லண்டனில் உள்ள கிங் எட்வார்ட் மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கபட்டார்.
பக்கிங்கம் பலஸின் முக்கியப் பொறுப்பாளரான எமிலி ஆண்ரூஸ் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் “பிரின்ஸ் பிலிப் உடல் நல குறைவு காரணமாக மருத்துவரின் ஆலோசனை படி கிங் எட்வார்ட் மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி அனுமதிக்கபட்டார். இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்” எனவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கையே எனவும் குறிபிட்டுள்ளார். அவருக்கு 91 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்