ஆட்டோவில் 15 சவரன் நகைகளை தவறவிட்ட 63 வயது மூதாட்டி- உடனடியாக கண்டுபிடித்துக் கொடுத்த போலீசார்!

ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 15 சவரன் நகையை, உடனடியாக கண்டுபிடித்து போலீசார் ஒப்படைத்தனர்.  சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சபுராபீ (63) பழையவண்ணாரப்பேட்டை பகுதிக்கு ஆடைகள் வாங்க சென்றுள்ளார். ஆடைகள் வாங்கிவிட்டு செல்ல அவ்வழியாக…

ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 15 சவரன் நகையை, உடனடியாக கண்டுபிடித்து போலீசார் ஒப்படைத்தனர். 

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சபுராபீ (63) பழையவண்ணாரப்பேட்டை பகுதிக்கு ஆடைகள் வாங்க சென்றுள்ளார். ஆடைகள் வாங்கிவிட்டு செல்ல அவ்வழியாக சென்ற ஆட்டோவை பேரம் பேசியுள்ளார். பேரம் பேசியபடி ஒரு ஆட்டோவில் தனது கையில் இருந்த மூன்று கட்டைபைகளில் ஒன்றை ஆட்டோவில் வைத்து உள்ளார்.

பின்னர் தொகை அதிகமாகவே வேண்டாம் என ஆட்டோவை திருப்பி அனுப்பியுள்ளார்.
பின்னர்  தான்  வைத்திருந்த கட்டை பையை முன் ஓர் ஆட்டோவில் மறந்து வைத்திருந்தது நினைவிற்கு வந்தது. உடனடியாக சபுராபீ ராயபுரம் காவல் நிலையத்திற்கு சென்று அளித்த புகாரின் பேரில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

ஆட்டோவின் பதிவெண்ணை கொண்டு அது மணலியில் வசித்து வரும் கிஷோர் என்பவரின் ஆட்டோ என தெரியவந்தது. பின்னர் தொலைபேசி வாயிலாக கிஷோரை தொடர்பு கொண்ட போலீசார் அவரது வீட்டிற்கு சென்று ஆட்டோவை பார்த்த போது
சபுராபீ வைத்த இடத்திலேயே அந்த பை இருந்ததும், அந்த பையை ஆட்டோஓட்டுநர்
கவனிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

பின்னர் அதில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 1500 ருபாய் பணம் ஏடிஎம் கார்டு
போன்றவற்றை போலீசார் மீட்டு  சபுராபீயை அழைத்து  கொடுத்தனர்; மேலும் காவல்துறையினர் தொடர்பு கொண்டதும், சரியான விலாசத்தை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரையும் போலீசார் பாராட்டினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.