26.7 C
Chennai
September 27, 2023
ஆசிரியர் தேர்வு இந்தியா

பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்

இன்று நடைபெற உள்ள போராட்டத்தின்போது, ரயில்களை மறிக்கப் போவதில்லை என்று, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த நவம்பர் 26ம் தேதி முதல், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக விவசாய சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜெய்ப்பூர் – டெல்லி சாலையை மறித்து போராட்டம் நடத்தப்படும் என்றும், அடுத்தடுத்த நாட்களில் மற்ற சாலைகளும் படிப்படியாக மறிக்கப்படும் என்றும், பாரதிய கிசான் சங்கத் தலைவர் பல்வீர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனினும், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை அடுத்து வரும் நாளை மறுநாள் பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும், பல்வீர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

‘அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல’ – உச்சநீதிமன்றம்

Web Editor

இளைஞர்கள், விவசாயிகளை பயமுறுத்துவது தான் பாஜகவின் கொள்கை- ராகுல்காந்தி

Jayasheeba

இங்கிலாந்தை மிரட்டும் புதியவகை கொரோனா; இந்தியாவில் இன்று அவசர கூட்டம்!

Jayapriya

Leave a Reply