முக்கியச் செய்திகள் தமிழகம்

பளுதூக்கும் போது மாரடைப்பால் இளைஞர் உயிரிழப்பு

மதுரையில் பட்டதாரி இளைஞர் ஜிம்மில் அதிக பளு தூக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கு வயது இருபத்தி ஏழு. இவர் பட்டப்படிப்பு முடித்த நிலையில் கணினி விற்பனை செய்யும் பணி செய்து வந்திருக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தநிலையில் தினமும் வீட்டின் அருகே இருக்கக்கூடிய ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். வழக்கம் போல் நேற்றும் உடற்பயிற்சிக்கு சென்றபோது அதிக எடை கொண்ட பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்ட சக நண்பர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து எஸ் எஸ் காலனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிக பளு தூக்கியதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளியில் தோன்றினார் ஜாக் மா!

Jayapriya

பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்த தலைமை கழக நிர்வாகிகள்: அதிமுக வரலாற்றில் புதிய திருப்பம்

Web Editor

மாடியில் இருந்து தூக்கி வீசி 4ம் வகுப்பு மாணவன் கொலை – ஆசிரியர் வெறிச்செயல்

EZHILARASAN D