மல்யுத்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டி 57 கி எடை பிரிவில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டி 57 கி எடை பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் கொலம்பிய வீரரை 13-2…

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டி 57 கி எடை பிரிவில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டி 57 கி எடை பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் கொலம்பிய வீரரை 13-2 கணக்கில் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 8 நாட்டின் வீரர்கள் பங்கேற்ற காலிறுதிக்கான தகுதி சுற்று போட்டியில் கொலம்பியாவின் அர்பனோவை ரவிக்குமார் எதிர்கொண்டார். அதே போல செர்பியாவின் மிகிக்கை எதிர்கொண்ட ஜப்பானின் டகஹஹி காலிறுதிக்கு முன்றேயுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காலிறுதி போட்டியில், பல்கேரியாவின் வான்கலோவை ரவிக்குமார் எதிர்கொள்கிறார். அதேபோல ஜப்பானின் டகஹஹி கஜகஸ்தானின் சனாயேவ்வை எதிர்கொள்கிறார். இதில் வெற்றிப்பெறுவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

இதே போல ஆடவருக்கான மல்யுத்தம் 86 கி எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா, நைஜிரியாவின் அகியோமோரை 12-1 எனும் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் காலிறுதி போட்டியில் சீனாவின் லின் ஜுஷெனை தீபக் எதிர்கொள்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.