உலக பெரும் பணக்காரர்கள் பட்டியல்; மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் எலான் மஸ்க்!…

டெஸ்லா  தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றார். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட…

டெஸ்லா  தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றார்.

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டார்.

சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.  டெஸ்லா கார்கள் வெளியான சில நாள்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

அதன் பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை இவர் அதிக விலை கொடுத்து வாங்கியதாகவும் கூறப்பட்டது. இதனால், இவரது சொத்து மதிப்பு கணிசமாக குறைந்தது. கடந்தாண்டு மட்டும் இவர் பல பில்லியன் டாலரை இழந்திருந்தார். இதனால் உலகின் டாப் பணக்காரர் என்ற பெயரையும் இவரால் தக்க வைக்க முடியாமல் போனது.

இதனால் எல்.வி.எம். ஹச்-ன் பங்குகள் எகிறியதால் அதன் உரிமையாளரான பெர்னார்ட் அர்னால்ட், எலான் மஸ்க்கைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது.

மறுபக்கம் எலான் மஸ்க் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நம்பர் 2 இடத்தில் இருந்த எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை அடைந்துள்ளார்.

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு $192 பில்லியன் என்று ப்ளூம்பெர்க் கணித்துள்ளது, அர்னால்ட்டின் தற்போதைய சொத்து மதிப்பு $187 பில்லியன் என்பதால், அவர் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு சென்றுவிட்டார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.