”மகளிர் உரிமை மாநாடு தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும்” என கனிமொழி எம்பி நியூஸ் 7 தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என திமுக மகளிர் அணி அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மாநாட்டில் மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடல்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் மகளிர் உரிமை மாநாடு தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
” தேசிய அளவில் முன்னெடுத்துள்ள இந்த மகளிர் உரிமை மாநாடு வாக்காளர்களில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் கருத்துக்களை , எண்ணெங்களை பிரதிபலிக்கும் வகையிலும் முக்கியதுவம் அளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இன்று நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பெண்களின் எதிர்காலம் கேள்வி குறியாகும் சுழல் உருவாகி உள்ளது, பெண்களின் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது, இந்த ஆபத்துக்களை பற்றிய விழிப்புணர்வு கருத்துரையாடல் மற்றும் பெண்களை மையப்படுத் கூடிய மாநாடாக இந்த மாநாடு அமையும்.
மதவாத அரசியல் குறித்தும், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து விட்டு அது எப்போது நிறைவேற்றப்படும் என்கிற தெளிவே இல்லாத சூழல் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் “ என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.