கொரோனா தடுப்பூசி குறித்த வெள்ளை அறிக்கையை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிட தயார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்து 32 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளதாக தெரிவித்தார். திமுக அரசு பதவியேற்ற பிறகு நாளொன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 61 ஆயிரத்து 297 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், 70 நாட்களில் ஒரு கோடியே 12 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவருக்கு தேவைப்பட்டால், தடுப்பூசி குறித்த வெள்ளை அறிக்கை தர தயாராக உள்ளோம் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக ஆட்சியில் எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரத்து 838 டோஸ் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.