குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை கீழடுக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பதிவாகியது. இதனிடையே இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







