பள்ளிகளில் வீடியோ ரீல்களை உருவாக்கினால், 5 திருக்குறள்களை படித்து பொருளுடன் ஆசிரியரிடம் எழுதிக் காட்ட வேண்டும்; இரண்டு நீதிக்கதைகளை வகுப்பறையில் சொல்ல வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
5 வரலாற்று தலைவர்களை பற்றி வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும். வகுப்பு தலைவராக ஒரு வாரத்துக்கு செயல்பட வேண்டும். ஏன் தவறு செய்தார் என்று மாணவர் எழுத்துப்பூர்வமான விளக்கம் தர வேண்டும்
படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தல், பொது இடங்களில் இடையூறு செய்தல், ஆசிரியர்களை அவமதித்தல், ராகிங் செய்தல், புகை பிடித்தல், மது அருந்துதல், போதை பொருட்களை பயன்படுத்துதல், சாதி, மத, பொருளாதார பாகுபாடு பார்த்தல், தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல், உருவகேலி செய்தல் உள்ளிட்ட தவறுகளில் ஈடுபட்டாலும் முதல்முறை ஆலோசனை கூற வேண்டும்.
2-ம் முறை நீதிக்கதைகள் போதித்தல், திருக்குறள் கூறுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். 3-ம் முறை அதே தவறை செய்தால் காவல்நிலையம் அழைத்து சென்று குழந்தை நேய காவல் அதிகாரி மூலம் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.