மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நாளை (27ம் தேதி) முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தேர்தலுக்கான பரப்புரை நேற்று நிறைவடைந்தது.
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. முதல் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதுபோல் 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டபேரவைக்கு, முதல் கட்டமாக 47 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜகவிற்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல்வர் மமதா பானர்ஜியின் ஆட்சியை விமர்சித்து பாஜகவின் முக்கிய தலைவர்கள் தீவிர தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அசாமில் ஆளும் பாஜக 39 தொகுதிகளிலும் அசாம் கணபரிஷத் 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. மேலும் காங்கிரஸ் 43 தொகுதிகளிலும் அதன் கூட்டணியில் ஆர்ஜேடி, அஞ்சலிக் கணமோர்ச்சா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அசாமில் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள கடும் முயற்சிகள் எடுத்து வருகிறது. 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக முதல் முறையாக அசாமில் வெற்றிபெற்றது. இந்த முறை 100-க்கு மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் பாஜக செயல்பட்டு வருகிறது.







