29.2 C
Chennai
May 20, 2024
தமிழகம் செய்திகள்

”கிணத்த காணோம்”என வடிவேலு பாணியில் புகார் அளித்த சம்பவம்!!

மயிலாடுதுறை அருகே ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றை காணவில்லை எனவும் அது தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இளைஞர் ஒருவர் மனு அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூர் கிராமத்தில்
ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குடிநீர் கிணறு அமைந்துள்ளது. இதனிடையே திமுக ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி தனக்கு நெருக்கமான ஜெயக்குமார் என்பவருக்கு 15,000 ரூபாய்க்கு கிணற்றை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதை தொடர்ந்து ஜெயக்குமார் வீட்டின் முன்பு கிணறு இடையூறாக இருந்ததால் அதனை முழுவதுமாக அகற்றி உள்ளார். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் விளக்கம் கேட்டபோது, உரிய பதில் அளிக்காதததால் அதிகாரிகளிடம் அப்பகுதியை சேர்ந்த ராஜ் பரத் என்ற இளைஞர் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வட்ட ஆட்சியரிடம் கிணற்றை காணவில்லை என கூறி புகார் மனு அளித்தார்.

இதை தொடர்ந்து அப்பகுதியில் தனி நபரால் கிணறு அகற்றப்பட்டதாகவும், அதிகாரிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு கிணற்றை மீட்டு தர வேண்டும் எனவும் மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். உடனடியாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading